
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது ஓய்வை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருபவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளின் உச்சியில் இருப்பவர். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சச்சின், அங்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் பலரும், சச்சினை ஓய்வு பெறுமாறு அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் நபராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், சச்சின் கடந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து சச்சின் குருவான முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும், செளரவ் கங்குலியும், அதே கருத்தை ஆமோதித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
எதிர்கால இந்திய அணியில் சச்சின் இடம் பெறமாட்டார் என்பது நிச்சயம். இதனால் சச்சினிடம் ஓய்வு பெறுமாறு, அணித் தேர்வாளர்கள் எடுத்து கூறலாம். சச்சினை தனியாக அழைத்து இது குறித்து பேச வேண்டும். அதன்மூலம் அவரே தனது ஓய்வை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இது குறித்து சச்சினிடம் பேசுவதற்கு ஸ்ரீகாந்த் தான் தகுந்த நபர் என்று கருதுகின்றேன். ஏனெனில் சச்சின் இந்திய அணியில் அறிமுகமான போது, ஸ்ரீகாந்த் தான் கேப்டனாக இருந்தார். தற்போது அவர் அணித் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளதால், சச்சினிடம் ஓய்வு குறித்து பேசலாம் என்றார்.
இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியதாவது,
ஒருநாள் தொடர்களில் சச்சின் வருவதும், போவதுமாக உள்ளார். இதனால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறன் பாதிக்கப்படுகின்றது. ஒருநாள் போட்டிகளில் அவரால் தொடர்ந்து ஆட முடியுமா என்று கேட்க வேண்டும்.
அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாதபட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று கொள்ள வேண்டும். இது குறித்து சச்சினே சொந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சச்சினை போல இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக பங்கு ஆற்றியவர் யாரும் இல்லை. எனவே அணியின் தேர்வாளர்களுக்கு கூட, சச்சினை ஓய்வுப் பெற கூற அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வருபவர் சச்சின் டெண்டுல்கர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் யாரும் நெருங்க முடியாத சாதனைகளின் உச்சியில் இருப்பவர். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சச்சின், அங்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர்கள் பலரும், சச்சினை ஓய்வு பெறுமாறு அறிவுறுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் முதல் நபராக முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ், சச்சின் கடந்த உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து சச்சின் குருவான முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும், செளரவ் கங்குலியும், அதே கருத்தை ஆமோதித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
எதிர்கால இந்திய அணியில் சச்சின் இடம் பெறமாட்டார் என்பது நிச்சயம். இதனால் சச்சினிடம் ஓய்வு பெறுமாறு, அணித் தேர்வாளர்கள் எடுத்து கூறலாம். சச்சினை தனியாக அழைத்து இது குறித்து பேச வேண்டும். அதன்மூலம் அவரே தனது ஓய்வை அறிவிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இது குறித்து சச்சினிடம் பேசுவதற்கு ஸ்ரீகாந்த் தான் தகுந்த நபர் என்று கருதுகின்றேன். ஏனெனில் சச்சின் இந்திய அணியில் அறிமுகமான போது, ஸ்ரீகாந்த் தான் கேப்டனாக இருந்தார். தற்போது அவர் அணித் தேர்வுக் குழுவின் தலைவராக உள்ளதால், சச்சினிடம் ஓய்வு குறித்து பேசலாம் என்றார்.
இது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி கூறியதாவது,
ஒருநாள் தொடர்களில் சச்சின் வருவதும், போவதுமாக உள்ளார். இதனால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களின் திறன் பாதிக்கப்படுகின்றது. ஒருநாள் போட்டிகளில் அவரால் தொடர்ந்து ஆட முடியுமா என்று கேட்க வேண்டும்.
அதற்கு அவரால் பதில் அளிக்க முடியாதபட்சத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று கொள்ள வேண்டும். இது குறித்து சச்சினே சொந்தமாக ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சச்சினை போல இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிக பங்கு ஆற்றியவர் யாரும் இல்லை. எனவே அணியின் தேர்வாளர்களுக்கு கூட, சச்சினை ஓய்வுப் பெற கூற அதிகாரம் இருப்பதாக தெரியவில்லை என்றார்.














