Search
Newsletter
 
Share This Story

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Posted by:
Published: Sunday, July 29, 2012, 14:33 [IST]

Pcb Will Suffer Loss Without India Series In Pak
 

கராச்சி: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்த இந்தியா ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இஜாஜ் பட் கூறியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒருநாள் போட்டிகளை இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் ஒப்புதல் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இஜாஜ் பட், இந்தியாவில்தான் என்றில்லை.. இருநாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு போட்டி மட்டும் நடைபெறாமல் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருந்திருக்கும் என்றும் கூறிய்ள்ளார்.

"2006-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை. 2009-க்குப் பிறகு வெளிநாட்டுப் போட்டிகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறக் கூடிய இந்த ஒருநாள் தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது" என்றும் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் விளையாடும்போது ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் 40 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். இதே இந்தியா போட்டிகளை நடத்தினால் அந்நாட்டுக்கு மீட்டியா உரிமங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கும் வருவாயில் பாகிஸ்தானும் பங்கு கோர வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத நிலையில் பாகிஸ்தான் அந்நாட்டு அணி விளையாடுவதற்கான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் இஜாஜ் பட் கூறியிருக்கிறார்.

English summary
PCB's finances would be hit hard if India does not agree to play a return series against Pakistan, feels the country's former cricket board chairman, Ijaz Butt.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil