மும்பை: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் 6-வது முறையாக சச்சின் டெண்டுல்கர் விளையாட இருக்கிறார்.
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. ரஞ்சி கோப்பையின் முதல் போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராகவும் காலிறுதியில் பரோ அணிக்கு எதிராகவும் அரை இறுதியில் சர்வீசஸ் அணிக்கு எதிராகவும் சச்சின் விளையாடினார். தற்போது பைனலில் விளையாட இருக்கிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் 300 ரன்களை எடுத்திருக்கிறார். இதற்கு முன்பு ரஞ்சி கோப்பையின் 5 இறுதிப் போட்டிகளில் அவர் விளையாடியிருக்கிறார். அவர் விளையாடிய 5 இறுதிப் போட்டிகளில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
6-வது முறையாக சச்சின் களம் காணும் ரஞ்சி கோப்பை பைனல் போட்டியில் மும்பை அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.










