மும்பை: மும்பையில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 114 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் இறங்கியது. ஹெய்ன்ஸ் 52, கேமரூன் 75 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஓரளவு சிறப்பாக விளையாடினர். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணீல் குவின்டைன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா மகளிர் அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.







